• May 18 2024

பட்டாணிக் கடையில் பொட்டலம் போடும் பிரபல நடிகர்... இவருக்கா இந்த நிலை... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் பல நடிகர்கள் அந்தக் காலத்தில் இருந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் அவர்களுக்கு இன்னமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்போ, பிரபலமோ கிடைக்காமல் இன்றுவரை தவித்து வருகின்றனர். 


இருப்பினும் இவர்களுக்கு அப்படியே நேர்மாறாக தற்போது உள்ள பல இளம் நடிகர்கள் ஒரு சில படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்த போதிலும் தங்களுடைய சிறந்த நடிப்பாலும் திறமையாலும் வெகுவாக ரசிகர்கள் பலரதும் மனங்களை கவர்ந்து அவர்களுக்கென்று தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கிறார்கள்.

இவ்வாறாக மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பை பெற்றுக்கொள்ளத் தவறிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மகேஷ்.


இவர் மாறுபட்ட கதைகளை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து பலஇளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்த 'அங்காடி தெரு' திரைப்படத்தின் வாயிலாக சினிமாவில் அறிமுகமானவர்.


இந்தப் படத்தில் மகேஷ் மற்றும் நடிகை அஞ்சலி இருவரின் நடிப்பும் மக்களிடம் இருந்து பலத்த பாராட்டுக்களை அள்ளிக் குவித்தது. இதன் மூலம் பிரபலமான மகேஷ் அதன் பின்னர் ஒரு சில படங்களிலேயே நடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் ஏதும் சரிவர இவருக்கு அமையவில்லை. 


இருப்பினும் மகேஷ் 'அங்காடி தெரு' படத்தின் வாயிலாக பெற்ற பிரபலத்தை வைத்தே பல சேட்டைகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

அதாவது அந்த படத்தில் நடித்த பின்னர் "நான் அந்த பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்கிறேன், இந்த தயாரிப்பாளர் என்னை அழைக்கிறார்" என வாய்க்கு வந்தாற்போல் பல பொய்களை கூறியதோடு மட்டுமல்லாமல், பல இளம் பெண்களை ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி தனது ஆசை வலையில் விழவைத்து அவர்களுடைய பணத்திலேயே சொகுசான வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார். 

இந்நிலையில் "பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே தீருவான்" என்பது போல் மகேஷின் லீலை சேட்டைகள் எல்லாம் வெளியே தெரிய வர அவருடன் நெருக்கமாக இருந்த நடிகைகள் அனைவரும் அவரை சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து விட்டு விலகி சென்றுள்ளனர். 

அதன் பின்னர் பணம் ஏதும் இல்லாமல் வறுமையில் வாடி வந்த நடிகர் மகேஷ் வேறு வழியில்லாமல் மீண்டும் தனது அப்பாவின் பட்டாணி கடையிலேயே பொட்டலம் போட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் ஆனது தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement