• Apr 27 2024

விவாகரத்து பெற்றதை போட்டோஷுட் நடத்தி கொண்டாடிய நடிகை- கண்ணீர் மல்க அளித்த பேட்டி- இவ்வளவு கொடுமைப்படுத்தினாரா?

stella / 11 months ago

Advertisement

Listen News!


ஷு தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய மகளான ரியா என்பவருடன் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை ஷாலினி. இவருக்கு திருமணம்  முடிந்த ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு இரண்டு பேரும் பிரிந்தனர். 

விவாகரத்துக்கு பிறகு சிங்கிளாக இருந்த ஷாலினிக்கு ரியாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஷாலினியின் ரசிகர் என கூறி ரியாஸ் பழகியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தாங்கள் காதலிப்பதாக வெளிப்படையாக ஷாலினியும் அறிவித்தார்.


ஷாலினிக்கு ஏற்கனவே விவாகரத்து ஆனது போல் ரியாஸுக்கும் விவாகரத்து நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும் இரண்டும் பேரும் திருமணம் செய்துகொண்டனர். இதனை அடுத்து இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தாள். சுமூகமாக அவர்களது திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. ஆனால், ரியாஸ் தன்னை பலமுறை அடித்து துன்புறுத்தியதாக ஷாலினி கூறியிருந்தார்.

தன்னை அடிப்பதோடு மட்டுமின்றி ரியாஸுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து விவாகரத்து மனு தாக்கல் செய்தார் ஷாலினி. தற்போது அவருக்கு விவாகரத்தும் கிடைத்திருக்கிறது. இதனை போட்டோ ஷூட் நடத்தி ஷாலினி சமூக வலைதளங்களில் பதிவிட்டு அறிவித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


இந்த போட்டோ ஷுட் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது ரியாஸ் ஆரம்பத்தில் நல்லாத் தான் இருந்தான் ஆனால் குடிச்சா மட்டும் தான் ரொம்ப தொல்லை பண்ணுவான் என்னை ரொம்ப போட்டு அடிப்பான். குழந்தை பிறந்ததுக்கு பிறகு திருந்துவான் என்று பார்த்தால் ஆனால் குழந்தை பிறந்ததுக்கு பிறகு தான் ரொம்ப மோசமாக இருந்தான் என்னால அதை எல்லாம் தாங்க முடில ஒரு நாள் அடிச்ச போது திரும்ப அடிச்சிட்டேன்.இதுக்கு பறகு தான் டிவோஸ் பண்ணனும் என்று முடிவு பண்ணி பிரிஞ்சிட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement