• May 10 2024

'ஒரு நல்ல நடிகனை தமிழ் சினிமா இழக்கிறது'-வடிவேலு குறித்து உருகிய நடிகர் பசுபதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் என்று கூறியதும் அனைவரின் நினைவிலும் தோன்றும் நடிகர் வடிவேலு தான். இவர் தனது காமெடி கலந்த இயல்பான நடிப்பினால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை கவர்ந்தவர். அத்தோடு அவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து விட்டார்.

அந்த வகையில், பார்த்திபன் மற்றும் பிரபுதேவா போன்ற பிரபலங்களுடனான அவரது நகைச்சுவை இப்போ வரை பேசும் என்பதில் சந்தேகமே இல்லை. சில ஆண்டுகளாக தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலால் படவாய்ப்பின்றி இருந்த இவர் தற்பொழுது மீண்டும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இதன் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதனை தொடர்ந்து, உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் நகைச்சுவை வேடத்திலும் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் பசுபதி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசினார், அப்போது பேசுகையில் ஒரு நல்ல நடிகனை தமிழ் சினிமா இழக்கிறது, அவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக நடிப்பார், நானே அவருடன் நிறைய படம் நடித்திருக்கிறேன்.

இதனை கமல் சார் கூட ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பார். நம் தமிழ் சினிமாவில் வடிவேலு இப்போது எந்த படத்திலும் நடிப்பதில்லை. நாம் அவரை மிஸ் செய்கிறோம் என்று வருத்தத்துடன் கூறினார். ஆனால் இப்போது வடிவேலு நடிப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement