• Apr 28 2024

சந்திரமுகி 2 படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- லைகா நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

stella / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக 'சந்திரமுகி 2' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த வடிவேலுவை தவிர அனைவருமே புது நடிகர்கள் தான்.

முதலில் 'சந்திரமுகி 2' படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குநர் வாசு முடிவு செய்த நிலையில், ரஜினிகாந்துக்கு, திரைக்கதையில் திருப்தி இல்லாததால் கதையை மாற்ற கோரி, பி.வாசுவிடம் கூறினார். ஆனால் கதையில் மாற்றம் செய்வதற்கு பதில், நடிகரையே மாற்ற முடிவு செய்து, இந்த படத்தை நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்க முடிவு செய்தார் பி.வாசு.


அதன் படி இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டே வெளியான போதிலும், மற்ற படங்களில் ராகவா லாரன்ஸ் பிசியாக இருந்ததால், இந்த படத்தில் நடிக்க தாமதம் ஆனது.ஒரு வருடங்களுக்கு மேல் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்துள்ளது. 

இதனை பட குழுவினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.எனவே விரைவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்பொழுது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதாவது சந்திரமுகி 2 படத்திலிருந்து சூப்பரான அப்டேட் ஒன்று நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement