• May 18 2024

பாட முடியாமல் மேடையில் அழுது தவிக்கும் அசானி... ஆறுதல் சொல்லும் சினேகன்... கண் கலங்க வைத்த வீடியோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் டிவியில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. இதில் பல சிறுவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அந்தவகையில் குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசானி என்கிற ஒரு பெண் கலந்து கொண்டு தனது பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றார். மேலும் அந்த சிறுமி பணம் இல்லாமையினால் தான் தாமதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்ற தகவலும் பலருக்கும் இவர் மேல் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் Dedication Round இடம்பெற்று வருகின்றது.இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் அசானி தனது தாய்க்காக பாடல் பாடுகின்றார்.

மேலும் அதில் அவர் கூறுகையில் "எனக்காக எங்க அம்மா தேயிலைக் கொழுந்து பறித்துக் கஷ்டப்படுகின்றார். அவருக்காகவும் எங்களுடைய மக்களுக்காகவும் நான் பாடுவேன்" என்கிறார். மேலும் அவரின் தாயார் கூறுகையில் "எங்க பெண்ணாவது எங்க தாய் மண்ணை மிதித்தது எங்களுக்கு மிக மிக சரியான சந்தோஷம்" என்கிறார்.


இதனைத் தொடர்ந்து அசானி "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது" என்ற பாடலைப் பாடுகின்றார். ஆனால் இடையில் அவரால் பாட முடியாமல் தடுமாறி போய் கண் கலங்கி நிற்கின்றார்.  இதனைப் பார்த்த சினேகன் உடனே "தங்கை எங்கேயோ ஒரு இடத்தில் தடுமாறி இருக்கிறாள், அவள் பாதங்களை சரி செய்ய உங்களது உள்ளங்கையை ஏந்தி அடுத்த களத்திற்கு கொண்டு போங்கள்" எனக் கூறுகின்றார்.


இதோ கண்கலங்க வைத்த அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement