• Apr 15 2025

"தீ பரவட்டும் .." நாளை வெளியாகவுள்ள சிவகார்த்திகேயன் புதிய பட அப்டேட்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கும் அதிகமாக ஒளிபரப்பாகி அதிக வசூலை பெற்று வெற்றியடைந்தது. இப் படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 25 ஆவது படமாகிய சுதா கெங்கார இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஆரம்பத்தில் "புறநானுறு " என பெயர் வைக்கப்பட்டு சூர்யா நடிக்க இருந்த இப் படத்திற்கு தற்போது "பராசக்தி " என பெயர் வைத்துள்ளனர்.


சிவாஜி ரசிகர்கள் மத்தியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள இப் படத்தின் தலைப்பு மற்றப்படுமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க தற்போது இப் படத்தின் படக்குழு நாளை புதிய அப்டேட் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.


சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம்ரவி ,அதர்வா ஆகியோர் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.1965 களில் இடம்பெற்ற நிகழ்வினை மையமாக வைத்து உருவாகி வரும் இப் படத்தினை Dawn Pictures உடன் இணைந்து Red Giant Movies தயாரிக்கவுள்ளது.


"தீ பரவட்டும் நாளை மாலை 4 மணி முதல் " என எழுதிய போஸ்ட்டர் ஒன்றுடன் நாளை இப் படத்தின் அறிவிப்பு டீசரை பார்க்கவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement