• Jul 07 2024

12 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதிக்குச் சென்ற ஷிவானி- நெற்றியில் செம கியூட்டாக நாமம் போட்டிருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் விறுவிறுப்பாகவும் சுவாரஸியமாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடி முடிந்த முக்கிய சீரியல் தான் பகல் நிலவு.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பாகிய இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.

இருப்பினும் பிக்பாஸ் சீசன் 4 இல் பங்கு கொண்டதன் பின்னரே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றார்.சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் கூட விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

இவர் தற்பொழுது திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கே கடைவீதியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பிறந்தநாளுக்கு கூட முதலில் கோயிலுக்கு சென்று வந்த புகைப்படங்களை தான் அவர் ஷேர் செய்திருந்தார்.

திருப்பதிக்கு செல்பவர்கள் அங்கே நெற்றியில் அழகாக நாமம் இட்டுக் கொள்வார்கள், நடிகை ஷிவானி நாராயணனும் தனது நெற்றியில் செம கியூட்டாக நாமம் போட்டிருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பதிக்கு சென்றுள்ளேன் என்றும் ஷிவானி குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement