• Jul 27 2024

கார்த்தியின் அடுத்த படம் ஜாபர் சாதிக் கதையா? அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

கார்த்தி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஜாபர் சாதிக் குறித்த கதை அம்சம் கொண்டது என்று தகவல்கள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும், ‘96’ இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. 

இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ’சர்தார்’ படத்தின் முதல் பாகத்தில் பாட்டிலில் விற்கப்படும் தண்ணீரில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கிறது என்றும் அந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்தும் பிஎஸ் மித்ரன் விரிவாக விளக்கி இருந்தார். 

இந்த நிலையில் ’சர்தார் 2’ படத்தில் சட்டவிரோதமாக விற்கப்படும் சில பொருட்களால் எந்த அளவுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் துன்பம் அடைகிறார்கள் என்றும் இதில் கோடிக்கணக்கான பணம் புரள்வது குறித்தும் கூற இருப்பதாக தெரிகிறது. 

குறிப்பாக சமீபத்தில் ஜாபர் சாதிக் சட்டவிரோதமான பொருட்களை விற்பனை செய்து கைது செய்யப்பட்ட நிலையில் இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜாபர் சாதிக் குறித்த கதையை தான் ’சர்தார் 2’ படத்தில் பிஎஸ் மித்ரன் சொல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை எடுக்க சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த கதையை படமாக்க பிஎஸ் மித்ரன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement