• May 08 2024

ஏப்ரல் 30-ஆம் தேதி சல்மான் கானை கொலை செய்யப் போகும் மர்ம நபர்.. வெளியாகிய அதிர்ச்சித் தகவல்.. தீவிர விசாரணையில் போலீஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவின் முக்கிய நட்சத்திர நடிகராகத்  திகழ்பவர் நடிகர் சல்மான்கான் ஆவர். சல்மானின் திரைப்படங்கள் எப்போதுமே வெற்றி திரைப்படங்கள் ஆகவே ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு ஹிந்தி திரையுலகில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். 


பொதுவாகவே திரைப் பிரபலங்கள் பலருக்கும் மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது சல்மான் கானுக்கும்  கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே பல முறை, இதுபோன்ற மிரட்டல்கள் அவருக்கு வந்திருந்தாலும்,  இந்த முறை போன் செய்த நபர் அவரை கொலை செய்ய நாள் குறித்துள்ள விடயத்தையும் கூறியுள்ளார்.


அந்தவகையில் ஏப்ரல் 10ம் தேதி, அதாவது நேற்று இரவு 9 மணிக்கு... மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, போன் கால் மூலம் இந்த மிரட்டல் அவருக்கு விடப்பட்டது. அதில் பேசிய அந்த மர்ம நபர், தன்னை ஜோத்பூரைச் சேர்ந்த, கவுரக்ஷக் ராக்கி பாய் என்று கூறி உள்ளார்.


அதன் பின்னர் ஏப்ரல் 30, 2023 அன்று சல்மான் கானை நான் கொண்டு விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த போன் கால் செய்தது யார் என்பதைக் கண்டறியும் நோக்கில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement