• Apr 28 2024

ஆண்கள் கை வைத்தால் அனுபவிக்கணும்... சர்ச்சையைக் கிளப்பிய ரேகா நாயர்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்து இன்று தமி சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த ஒருவரே ரேகா நாயர். அந்தவகையில் இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியிருந்த 'இரவின் நிழல்' என்ற படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்ததன் காரணமாக சிறுது காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்திருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ரேகா நாயர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அந்தவகையில் அதில் அவர் கூறுகையில் "தற்போது சில பெண்கள் நான் இது போன்று தான் ட்ரஸ் போடுவேன். உங்களுக்கு என்ன? என்று சொல்கிறார்கள். அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ" என்றார்.


மேலும் "நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன். ஆண்கள் கைவச்சுட்டு போகட்டும் என்கிற மனநிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடம் இல்லையே? என்று ரேகா நாயர் கூறியுள்ளார். தற்போது ரேகா நாயரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்து வருகிறது.   

Advertisement

Advertisement

Advertisement