• Apr 27 2024

மகாலட்சுமியை போண்டா கோழி என்று கூறிய ரவீந்தர்- அதற்கு அவர் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவின் நடித்த நட்புனா என்னனு தெரியுமா, ஷாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களைத் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.இதனைத் தொடர்ந்து சில படங்களை விநியோகமும் செய்துவருகிறார்.ரவீந்தர் சந்திரசேகருக்கும் டிவி நடிகை மகாலட்சுமிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.


இருவரது திருமண செய்திகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.இதனையடுத்து ரவீந்தர் உருவக் கேலிக்குள்ளானார். மேலும் ரவீந்தர் வசதி படைத்தவர் என்பதால் தான் மகாலட்சுமி அவரை திருமணம் செய்துகொண்டதாக விமர்சிக்கப்பட்டார். இருவருக்கு ஆதரவான கருத்துகளும் வெளியாகின.


இதனையடுத்து கணவன், மனைவி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர அவை அடிக்கடி வைரலாகிவருகின்றன.இந்த நிலையில் மனைவி மகாலட்சுமியினுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரவீந்திரன், நீ அதிகம் பறக்கும்போது மேகத்தையும் வானத்தையும் காண்பாய். நீ அதிகம் சிரிக்கும்போது நான் என்னுள் சொர்க்கத்தை உணர்வேன். மகிழ்ச்சியா இருடி போண்டா கோழி என பதிவிட்டுள்ளார்.


அவரது பதிவில் என்ன போண்டோ கோழினு சொல்றீங்க என ரவீந்திரனை ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.ஆனால் ரவீந்திரனுக்கு பதிலளித்துள்ள மகாலட்சுமி, ''என் காதலே, இந்த உலகத்தின் பெருமை மிகு பெண்ணாக மாற்றியதற்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement