• May 13 2024

’வாடிவாசல்’ படத்தில் இருந்து சூர்யா விலகல்.. தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

பொதுவாக ஒரு திரைப்படத்திலிருந்து பிரபல நடிகர் விலகினால் அந்த படத்தின் தயாரிப்பாளர் வருத்தப்படுவார், ஆனால்வாடிவாசல்படத்திலிருந்து சூர்யா விலகி உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், சூர்யா நடிப்பில்வாடிவாசல்திரைப்படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு கூட கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது என்பதும் இந்த படத்தில் நிஜ காளையுடன் சூர்யா நடிக்க இருப்பதால் அந்த காளையுடன் சில மாதங்களாக சூர்யா பழகி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் அமீர் நடிக்கிறார் என்பதும் சூர்யா இந்த படத்தில் இருந்து பின்வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் அமீர் நடிப்பதை வெற்றிமாறன் உறுதி செய்ததால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலக ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது.

ஒருவேளை சூர்யா விலகினால் சூரி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சூரி இல்லை, தனுஷ் தான் அந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வாடிவாசல்படத்தில் தனுஷ் நடித்தால் கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் தாணுவும் கருதுகிறாராம். அதுமட்டுமின்றி தாணுவிடம்வாடிவாசல்படத்தில் நடிக்க சூர்யா அட்வான்ஸ் வாங்கியுள்ள நிலையில் அந்த பணத்திற்காக தாணு அவர்களுக்கு அவர் வேறொரு படம் நடித்து கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

எனவே ஒரே நேரத்தில் தனுஷ் மற்றும் சூர்யா ஆகிய இரண்டு பிரபல நடிகர்களின் படங்களை தயாரிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இரட்டிப்பு சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement