• May 18 2024

லோகேஷ் கனகராஜ் மீது கடும் வருத்தத்தில் இருக்கும் கைதி பட தயாரிப்பாளர்- காரணம் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


மாநகரம் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கார்த்தியுடன் கைகோர்த்து உருவான திரைப்படம் தான் கைதி. ஒரே இரவில் நடக்கும் கதை, அப்பா-மகள் சென்டிமெண்ட், ஹீரோயின், பாடல்கள் இல்லாத படம் போன்ற எக்கச்சக்க ஹைலைட்ஸ்களுடன், தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். இப்படங்கள் இரண்டுமே சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருந்தது.


இதனை அடுத்து தற்பொழுது நடிகர் விஜய்யை வைத்து லியோ என்னும் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில் கைதி படத்தில் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் மீது மனவருத்தத்தில் இருக்கின்றாராம்.


காரணம் லோகேஷ் விக்ரம் படத்தைத் தொடர்ந்து கைதி 2 படத்தை எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது லியோ படத்தை இயக்குகின்றார். அடுத்தாக நடிகர் ரஜினிகாந்தை வைத்தும் படத்தை இயக்கப் போகின்றாராம். இதனால் எப்போது தான் கைதி 2 படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement