• Feb 23 2025

தன் உயிர் கணவர் விஜயகாந்தின் உருவத்தை டாட்டூ குத்திய பிரேமலதா..! நெகிழ்ச்சியான வீடியோ இதோ...

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில், சாலையில் இரு மருங்கிலும் லட்சக்கணக்கானோர்  கண்ணீருடன் விஜயகாந்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

இதை தொடர்ந்து பேசிய பிரேமலதா, தலைவர் விஜயகாந்தின் சமாதியை கோவிலாக மாற்றப்போவதகவும், 24 மணிநேரமும் அவரை  தொண்டர்கள் வழிபாடும் வகையில், தினமும் விளக்கேற்றி பூக்களால் அலங்கரிக்கப்போவதாகவும் கூறி இருந்தார்.


இந்த நிலையில், தற்போது தனது கணவர் உருவத்தை கையில் பச்சைக்குத்திக் கொண்டுள்ளார் விஜயகாந்த் பிரேமலதா.

அதாவது, தலைவர் விஜயகாந்தை தனது கையில் அப்படியே பச்சைக் குத்திக் கொண்டு, தொண்டர்கள் முன் இனிமேல் உங்களுக்கு எல்லாமே நான் தான் என தோன்ற உள்ளார் பிரேமலதா. 


அத்துடன், தனது கணவரும் தங்கள் கட்சியின் நிறுவனருமான மறைந்த விஜயகாந்தின் முழு உருவத்தை கையில் அழகாக பச்சைக் குத்திக் கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. 


Advertisement

Advertisement