• May 14 2024

3 நாட்களில் ரூ.300 கோடி தட்டி சென்ற “பதான்” திரைப்படம்.! மாஸ் காட்டும் ஷாருக்கான்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடித்த ‘பதான்’ 25 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சக்கைபோடு போட்டு வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த இப்படம் பாசிடிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜனவரி 25 அன்று வெளியான இப்படம் முதல் நாளில் உலக முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் நேற்றய கணிப்பின்படி, ரூ.230 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு வெளியாகிய ‘பதான்’ திரைப்படம் ஷாருக்கானுக்கு ஒரு தரமான ரீ என்ட்ரி படமாக அமைந்திருக்கிறது. அட ஆமாங்க… படம் வெளியான முன்றே நாளில் ரூ.300 கோடி வசூலித்ததாக தற்போதைய தகவல் அறியப்படுகிறது.



Advertisement

Advertisement

Advertisement