• Apr 27 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் வெடித்த புதிய பிரச்சினை- கண்ணன் கொடுத்த ஷாக்கிங் நியூஸ்- இன்றைய எப்பிஷோட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். அதாவது அதிகாரிகள் வந்து நீங்க சூப்பர் மார்க்கெட் கட்டியிருக்கின்ற இடம் விவசாய நிலம் அதனால அவ்வளவு பெரிய கட்டடம் கட்டக் கூடாது என்று கூறுகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜுவா, கதிர் மூர்த்தி ஆகியோர் அதிர்ச்சியடைகின்றனர். அத்தோடு தாங்கள் இதில் கடை கட்டுவதற்கான அனுமதி வாங்கித் தான் கட்டியதாக கூறுகின்றனர். ஆனால் அதிகாரிகள் கேட்பதாக இல்லாமல் வந்து கோட்டில பேசுங்க என்று கூறிவிட்டு செல்கின்றனர்.


இதன் பின்னர் கதிரும் ஜுவாவும் இது குறித்து தமக்கு அனுமதி தந்தவர்களிடம் பேசி விட்டு வருவதாக கூறி செல்கின்றனர். அதன்பின்னர் இவர்கள் அனைவரும் வீட்டுக்குச் சென்று நடந்தவை குறித்து கூறுகின்றனர்.இதனால் அவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இருப்பினும் அவர்களை கதிர் சமாதானம் செய்கின்றார். தொடர்ந்து ஜுவாவும் மூர்த்தியும் இரவு நித்திரை கொள்ளாமல் தனிமையில் இருந்து யோசிச்சுக் கொண்டு இருக்கும் போது கதிரும் தனதும் சென்று ஆறுதல்படுத்துகின்றனர். பின்னர் தமது பழைய கடையவே  நடத்தப் போவதாகவும் இந்த பிச்சினை தீரும் வரை இது தான் வழி என்றும் தெரிவிக்கின்றனர்.


தொடர்ந்து மறு நாள் காலையில் வேலைக்குச் செல்லும் கண்ணன் தான் குடும்பத்தை இனிமேல் பார்க்கப் போவதாக கூறுகின்றார். இதனால் அனைவரும் வியந்து போய் கேட்கின்றனர். அத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement