• May 19 2024

அடுத்தது போலீஸா...? சற்றும் எதிர்பார்க்காத புகைப்படத்தை வெளியிட்ட வனிதா... ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சை நாயகியாக மாறி இருப்பவரே நடிகை வனிதா. இவர் 'வனிதா என்றாலே வைரல்' என்று கூறுமளவிற்கு மக்கள் மத்தியில் பேமஸ் ஆகி இருக்கின்றார். இவர் எது பேசினாலும் சர்ச்சை, எது செய்தாலும் சர்ச்சை என்று கூறுமளவிற்கு பல விடயங்களில் சிக்கி வருகின்றார்.


இதற்கான காரணம் வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையும், அவரது கோபம் மிகுந்த இயல்பான குணமும்தான். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், தனது கணவரை ஒரு சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக பிரிந்து விட்ட நிலையில், தன்னுடைய 2 மகள்களுடனும் தனியாகவே வசித்து வந்தார் வனிதா.

அந்தநாள் முதல் இவருக்கு எந்தவித ஆதரவும் இல்லாமல், தனித்து இரு பெண் குழந்தைகளையும் கவனமாகவும், பாசமாகவும் வளர்க்க தொடங்கினார். இந்நேரத்தில் தான் 2020-ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் நடிகை வனிதா. இருப்பினும் இந்த வாழ்க்கையும் இவருக்கு கை கொடுக்கவில்லை. 


அதாவது ஒரு சில பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவரும் இணைந்த அதே வேகத்தில் பிரிந்துவிட்டனர். எனினும் தற்போதும் துவண்டு விடாமல் தன்னுடைய சொந்தக்காலில் தன்னுடைய மகள்களை பார்த்து வருகின்றார்.


அதுமட்டுமல்லாது இப்போது ஒரு சில படங்களில் நடித்தும் வருகின்றார். அந்தவகையில் தற்போதும் தன்னுடைய புதிய படம் ஒன்றிற்காக போலீஸ் உடையணிந்து அதனைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்படத்தில் வனிதாவின் கெட்டப்பை பார்த்து ஆச்சரியமடைந்ததோடு மட்டுமல்லாமல், அவரின் படம் முழுமையடைவதற்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement