• May 18 2024

மூர்த்தி குடும்பத்தை தவறாகப் பேசும் முல்லையின் அம்மா- கண்ணனை ஆறுதல்ப்படுத்திய ஐஸ்வர்யா- டாக்டர் சொன்ன குட் நியூஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

முல்லையின் அம்மா மூர்த்தி குடும்பத்தை தவறாகப் பேச முல்லையின் அப்பா சமாதானப்படுத்துகின்றார். பின்னர் ஹாஸ்பிட்டலில் தனியாக நின்று கண்ணன் அழுது கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா சென்று ஆறுதல்ப்படுத்துகின்றார்.


எல்லோருமே இப்படி தனியாக நின்று அழுது கொண்டிருந்தால் என்னடா பண்ணுறது. நாம தானே சமாதானப்படுத்தனும். நம்மளால ஆறுதல் சொல்லுறதை தவிர இப்போ எதுவுமே பணடண முடியாதேடா கவலைப்படாத கண்ணா அக்காவுக்கு ஒன்றுமே ஆகாது என்று சமாதானப்படுத்துகின்றார்.

பின்னர் ஹாஸ்பிட்டலில் கதிர் முல்லை கர்பமானது முதல் தன்னை ஒழுங்காக பார்ப்பது முதல் அனைத்தையும் நினைத்துப் பார்க்கின்றார். கதிர் அழுவதைப் பார்த்த மூர்த்தி அழாதடா முல்லைக்கு எல்லாமே கஷ்டப்பட்டு தானெ கிடைக்குது. இதுவும் ஒன்று நடக்காது நல்லதே நடக்கும் யோசிக்காதல் இரு என ஆறுதல்படுத்துகின்றார்.


அந்த நேரம் டாக்டர் வந்து முல்லைக்கு குழந்தை பிறந்து விட்டதாக சொல்ல மூர்த்தி என்ன குழந்தை பிறந்தது என்று கேட்க பெண் குழந்தை என்று சொல்கின்றனர். அத்தோடு தாயும் பிள்ளையும் நன்றாக இருக்கிறார்கள். 7மாசத்தில குழந்தை பிறந்ததால் இங்குபாட்டிலில் வைச்சு பார்த்துக்கிறோம். மற்றும் படி இரண்டு பேருமே நல்லா இருக்கிறாங்க என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இததுடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement