• May 18 2024

முதன்முறையாக தனது குழந்தையை கையில் ஏந்திய முல்லை- செம குஷியில் கதிர்- உணர்ச்சிவசமான ப்ரோமோ வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டி.ஆர்.பியிலும் முன்னணியில் நிற்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

கண்ணன் வாங்கிய கடனால் கதிர் ஜெயிலுக்கு போன கதிரை ஒரு வழியாக மூர்த்தி வெளியில் எடுத்து விட்டார். இதனை அடுத்து கதிர் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் மீண்டும் தங்களுடைய வீட்டுக்க கூட்டிட்டு வந்து விட்டார். கண்ணனைப் பார்த்ததும் முதலில் கோபப்பட்ட மூர்த்தி பின்னர் தன்னுடைய வீட்டில் சேர்த்துக் கொண்டார்.


இதன் பின்னர் முல்லையை வில்லன் ஒருவர் பைக்கினால் தள்ளி விட்டதால் முல்லை ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டார். பின்னர் ஆப்பரேஷன் செய்து முல்லைக்கு பெண் குழந்தையும் பிறந்து விட்டது. குழந்தை 7 மாதத்தில் பிறந்ததால் குழந்தையை இன்கியூபாட்டிலில் வைத்துள்ளதாக டாக்டர் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முல்லை குழந்தையை எப்போ டாக்டர் கையில தருவீங்க என்று கேட்க டாக்டர் கொஞ்சநேரம் கழித்து பிள்ளையை முல்லையின் கையில் கொடுத்து நீங்க வீட்ட போகலாம் என்று சொல்ல என்லோரும் குழந்தையை கையில் வாங்கி மாறி மாறி கொஞ்சுகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement