• May 12 2024

கோயிலில் சூர்யாவின் கன்னத்தை கிள்ளி விளையாடிய மஹா- மறைந்து நின்று பார்த்து சந்தோஷமடைந்த கோடீஸ்வரி- வெளியாகிய ப்ரோமோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். மூன்று பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தனது பிள்ளைகளை பெரிய கோடீஸ்வர வீட்டில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எவ்வாறு எல்லாம் போராடுகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் ஐஸ்வர்யாவுக்கு நடக்க வேண்டிய திருமணத்தை மஹா செய்து கொண்டார். இதனால் மஹாவைத் திருமணம் செய்த சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் மஹா மீதும் அவருடைய குடும்பத்தின் மீதும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சூர்யா தனது குடும்பத்துடனும் மஹாவுடனும் சேர்ந்து கோயிலுக்குச் செல்கின்றார்.அப்போது பூசாரி மஹாவையும் சூர்யாவையும் கோயிலைச் சுற்றி வரச் சொல்ல இருவரும் சுற்றி வர மஹாவுக்கு காலில் அடிபட்டதால் சூர்யா துாக்கிக் கொண்டு நடக்கின்றார்.

இதனை கோடீஸ்வரி மறைந்து நின்று பார்க்கின்றார். அத்தோடு மஹாவும் சூர்யாவின் கன்னத்தை கிள்ளி விளையாடுகின்றார். இந்தப் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement