• May 18 2024

“என்னை ஏன் விக்ரம் படத்திற்கு கொண்டு வந்தீங்க..? ” ஜாபர் சாதிக் கேட்ட கேள்விக்கு நச்சு என பதில் கூறிய லோகேஷ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ்.2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் முதல் சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்கள் வரை அனைவரையும் திரும்பிப்பார்க்க செய்தது என்று தான் கூற வேண்டும்.

வெளியான மாநகரம் திரைப்படம் அந்தாண்டு அதிக வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கார்த்தியின் கைதி படத்தை இயக்கி இருந்தர்.இப்படம் லோகேஷை மேலும் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. வித்யாசமான கோணத்தில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது..

இதைத்தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும் வசூல் வேட்டை நடத்தியது.இந்நிலையில் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுவருகிறது.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அழைக்கப்பட்ட லோகேஷிடம் விக்ரம் படத்தில் நடித்தவர்களும் மற்றும் பலரும் பல கேள்விகளை கேட்டு இருந்தனர்.

இந்நிலையில் பாவக் கதைகள் மூலம் அறிமுகமாகி, விக்ரம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் ஜாபர் சாதிக் லோகேஷிடம் ஒரு கேள்வி கேட்க அதற்கு நச்சு என்று பதிலளித்தார் விக்ரம் பட இயக்குநர்.

அதில் லோகேஷை பார்த்து என்னை ஏன் இந்த படத்திற்கு கொண்டு வந்தீங்க..? எனக்கு இந்த விசயம் பெரிய டவுட்டாகவே இருந்தது. ஏன் என கூற முடியுமா..? எனக் கேட்க அதற்கு பதிலளித்தார் லோகேஷ்.

ஜாபரின் காண்பிடன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் .அத்தோடு பாவக்கதைகளில் இவரை பார்த்ததுடனே இந்த காரெக்டரை ஜாபர் தான் பண்ணனும் என்று நினைத்தேன் அத்தோடு ஜபாரை பார்த்த எனக்கு ஹீரோ மாதிரி இருக்கும் எனவும் கூறிய விசயம் ஜபாரின் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement