• May 18 2024

படம் பார்க்க விடுங்கள் அல்லது பணத்தை தாருங்கள்... விஜய் ரசிகர்களை தியேட்டரை விட்டு வெளியே அனுப்பிய போலீசாரால் ஏற்பட்ட பரபரப்பு...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

சேலம் ARRS மல்டி பிளக்ஸ்  திரையரங்கில் நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தை காண கையில்  டிக்கட் உடன் வருகை தந்த ரசிகர்கள் இடம் இல்லை என வெளியேற்றபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. 


நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைபடனமானது இன்று வெளியாகியுள்ள. லியோ படத்திற்கான டிக்கட் விற்பனை 2 நாட்களுக்கு முன் ஆரம்பமான நிலையில் 500 முதல் 1000 வரை பணம் செலுத்தி டிக்கட் வாங்கி திரைப்படம் பார்ப்பதற்காக வருகை தந்த ரசிகர்களுக்கு திரையரங்கில் இடம் இல்லை என்று கூறி வெளியேற்றப்பட்டுள்ளனர்.


தியேட்டர்களில் முழுவதும் ரசிகர்கள் இருந்ததால் டிக்கட் வாங்கியவர்களுக்கு இடம் இல்லாமல் போனது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் விஜய் ரசிகர்களை வெளியேற்ற முற்பட்டனர் இதனால் போலீசார் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையில் வாக்குவாதம் இடம் பெற்றது. 


விடயமறிந்து வந்த திரையரங்கு உரிமையாளர் டிக்கட் வாங்கியவர்கள் முன்னராக வந்து இருக்க வேண்டும் . தாமதம் ஆனால் இடம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. இந்த விடையங்களை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த செய்தியாளர்களையும் வெளியேற்ற முயற்சித்தனர். ரசிகர்கள் திரையரங்கு உரிமையாளரிடம் ஒன்று எங்களுக்கு படம் பார்க்க விடுங்கள் அல்லது டிக்கட்டுக்கான பணத்தை தாருங்கள் என வாக்குவாதம் செய்தனர்.  

Advertisement

Advertisement