• Oct 08 2024

விட்றா வண்டிய.. 2 மாற்றுத்திறனாளி குழந்தைகள் வைத்திருக்கும் குடும்பத்திற்கு பாலா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கேபிஒய் பாலா பலருக்கு உதவி செய்து வருகிறார் என்பதும் ஏழை எளிய மக்களுக்கு அவர் செய்யும் உதவிகள் குறித்த புகைப்படம் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

சமீபகாலமாக அவர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து இந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வரும் நிலையில் இன்னும் அதிக உதவிகள் மக்களுக்கு போய் சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்திருக்கும் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் பள்ளிக்கு அழைத்துச் செல்லவும் முடியாமல் தவித்து வருவதாக பாலாவுக்கு தெரிய வந்தது.



இதனை அடுத்து அவர் அந்த குடும்ப அந்த குடும்பத்திற்கு ஒரு இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்க முடிவு செய்தார். இதையா அவர் ராகவா லாரன்ஸ் அவர்களிடம் கூறிய போது, வாங்கி கொடுத்திடலாம், எட்றா  வண்டியை, விட்றா வண்டியை என்று கூறியதோடு அந்த குடும்பத்தினரின் ஏழை குடிசை வீட்டிற்கு சென்று இருசக்கர வாகனத்தை கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

ஒரே நேரத்தில் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரையும் பார்த்த இன்ப அதிர்ச்சியில் அந்த குழந்தைகளின் தாயார் ராகவா லாரன்ஸ் காலில் விழுந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ பாலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ள நிலையில் பாலாவின் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதே போல் இன்னும் அவர் பல ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.



Advertisement