ரசிகர்களின் கனவு கன்னியாக திகழும் கியாரா அத்வானி இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவராகவும் கவர்ச்சி நாயகியாகவும் வலம் வருபவர் இவருக்கு இன்று பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் பாலிவுட் நடிகரும் காதலருமான சித்தார்த் மல்கோத்ராவுடன் நடிகை கியாரா அத்வானி தனது 30வது பிறந்தநாளை துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடி வருகிறார்.
திஷா பதானி மற்றும் டைகர் ஷெராஃப் இடையே சமீபத்தில் பிரேக்கப் ஆன நிலையில், கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா தங்களது உறவை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி உள்ளனர். கூடிய சீக்கிரமே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார் கியாரா அத்வானி. ஏற்கனவே டோலிவுட்டில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பரத் எனும் நான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட், வாரிசு படங்களிலேயே கியாரா அத்வானி தான் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தளபதி 67 படத்தில் கூட அவர் நடிக்கப் போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கப் போவதாகவும், அது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிற செய்திகள்
- இரண்டு நாட்களில் குலு குலு செய்த வசூல்...முழு விபரம் வெளியானது..!
- திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்
- பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க-வைரலாகும் புகைப்படம்..!
- ஹீரோவாக கலக்கும் நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா..?
- ரஜினிகாந்த் காலில் விழுந்த மாதவன்-வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!