• Oct 08 2024

ப்பா.. 8 வருடத்திற்கு முன் உன்னை எப்படி பார்த்தேன், இப்ப எப்படி பாக்குறேன்.. கீர்த்தி சுரேஷ் எமோஷனல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் 8 வருடத்திற்கு முன் பார்த்த ஒருவர் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது சமூக வலைத்தளத்தில் எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் அவர் இப்போது கூட பிஸியாக மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பதும் இருவரும் அவ்வப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவார்கள் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படமான ’மகாராஜா’ என்ற படத்தை ஜெகதீஷ் தயாரித்திருந்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ஒரு சக்சஸ் படமாகியுள்ளது. இந்த படம் வெற்றி பெற ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றி பெற்ற பின் அவருக்காக தனது எமோஷனலான பதிவையும் செய்துள்ளார்.



உங்களை 8 வருடத்திற்கு முன் பார்த்த போது உங்களுடைய நிறுவனத்தின் ஆரம்பத்தையும் 8 ஆண்டுகளுக்கு பின் இப்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருப்பதையும் பார்க்கும்போது நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ப்பா.. உங்கள் வளர்ச்சி சூப்பர், எல்லோரையும் விட உங்கள் அம்மா ரொம்ப சந்தோஷப்படுவார்கள், அவர்களுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு இதுதான்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெகதீஷ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement