• May 10 2024

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா'. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

புதுமுக இயக்குநர் தயாரிப்பாளருக்காக ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு தாதாவைப் பற்றி எப்படி படம் எடுக்கிறார். அதில் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடி கலந்து ரசிகர்களை கவரும் வண்ணம் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருந்தார்.

ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது. இதன்பிறகு இறைவி, பேட்ட , மகான் என கவனிக்கத்தக்க படங்களை எடுத்த கார்த்திக் சுப்புராஜ் எப்போது ஜிகர்தண்டா படத்தின் 2 ஆம் பாகத்தை எடுப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடம் நீண்ட காலமாக இருந்தது.

இந்நிலையில் ஜிகர்தண்டா படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகள் ஆகியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜிகர்தண்டா படத்தின் 2 ஆம் பாகம் விரைவில் உருவாகும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement