• May 10 2024

மாரடைப்பால் திடீரென மரணமடைந்த பிரபல நடிகர்- தொடர் சோகத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் பாபுராஜ் .நாடகத் துறையில் சிறந்து விளங்கிய இவர் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் என்ற பகுதியில் வசித்து வந்தார்.

இவர் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், சிஐஏ, மாஸ்டர் பீஸ், குண்டா ஜெயன், பிரேக்கிங் நியூஸ், மனோஹரம், அர்ச்சனா 31 நாட் அவுட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் காயம்குளம் கொச்சுன்னி, மின்னுக்கெட்டு, நந்தனம், ஐயப்பனும் வாவரும், தச்சோளி ஒத்தேனன், ஹரிசந்தனம், குஞ்சாலி மரக்கார் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இது மட்டுமன்றி வசனம் எழுதுதல், கலை இயக்கம், தியேட்டர் டைரக்ஷன் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக பாதிக்கப்பட்டார் பாபுராஜ். இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாபுராஜ் மரணமடைந்தார்.

பாபுராஜின் திடீர் மரணம் மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த பாபுராஜ் வாழப்பள்ளிக்கு சந்தியா என்ற மனைவியும் பிஷால் என்ற மகனும் உள்ளனர். இளம் நடிகரான சரத் சந்திரன் மரணமடைந்து 3 நாட்களில் நடிகர் பாபுராஜும் மரணமடைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement