• Apr 28 2024

சிம்புவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி -நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தை  பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார்.

முதல் பாகமான PS1 படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி சர்ச்சை கேள்விக்கு பதில் அளித்து உள்ளார்.சிம்பு இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருந்தார் என்றும், அவர் நடித்தால் நான் நடிக்கமாட்டேன் என ஜெயம் ரவி கூறியதாகவும் ஒரு செய்தி முன்பு பரவியது. அது பற்றி ஜெயம் ரவியிடம் தற்போது கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.



அதற்கு பதில் கூறிய ஜெயம் ரவி, "நானே சின்ன வாய்ப்பு கிடைத்தது என அதில் சென்று நடிக்கிறேன். நான் இப்படி சொன்னால் மணிரத்னம் ஏற்றுக்கொள்வாரா. இப்படி ஒரு செய்தி பரவிய போது சிம்புவே எனக்கு போன் செய்து பேசினார்."

'நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றால் சந்தோசப்படும் முதல் ஆள் நீதான் என்பது எனக்கு தெரியும். அதனால் இந்த செய்திகளை எல்லாம் கண்டுகொள்ளாதே' என சிம்புவே என்னிடம் சொன்னார்.. என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்து உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement