• May 18 2024

கார்த்திக்கை பழி வாங்கத் துடிக்கும் சுந்தரி கைது செய்யப்படப்போகின்றாரா?- விறுவிறுப்பான திருப்பங்களுடன் சுந்தரி சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.கார்த்திக் இரண்டாவதாக அனு என்பவரைத் திருமணம் செய்திருக்கும் விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் தெரிய வந்து விட்டது. 

இருப்பினும் அனுவுக்கு கார்த்திக் பற்றி தெரிந்தால் என்ன நடக்கும் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.இந்த நிலையில் அருண் சுந்தரியைக் கொலை செய்ய முற்பட்ட போது அந்த கத்திக்குத்து கார்த்திக் மீது விழுந்துள்ளது.


இதனால் கார்த்திக் ஹாஸ்பிட்டலில் இருக்கிறார். இந்த நிலையில் கார்த்திக்கை பார்க்க சொல்லி சுந்தரியிடம் அனுவும் அவரது அம்மாவும் சொல்கின்றனர்.இது ஒரு புறம் இருக்க அருண் கடுமையாக இருப்பதாகவும் அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் சுந்தரிக்கு தான் பிரச்சினை என்றும் வக்கீல் சொல்கின்றார். 

இப்படியான நிலையில் சுந்திரியை கைது செய்யப் போகின்றார் என்ற விஷயம் கார்த்திக்கிற்கு தெரிய வந்ததால் கார்த்திக் சந்தோஷத்தில் இருக்கின்றார். அதே போல இன்னும் ஒரு மாதம் தான் அதுக்கு பிறகு கார்த்திக்கை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று சொல்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement