• May 18 2024

காணாமல் போன அப்பத்தா... கடத்தியது குணசேகரன் இல்லையா..? அப்போ இவர்தானா..? - Ethirneechal..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல்  அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


அந்தவகையில் இந்த சீரியலின் கதைப்படி தற்போது ஜீவானந்தத்தின் மனைவி குணசேகரன் போட்ட திட்டத்தினால் துப்பாக்கி சூடு பட்டு இறந்து விட்டார். மேலும் ஜீவானந்தத்திடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யும் நோக்கில் அப்பத்தாவை ரூமில் அடைத்து வைத்திருந்தார்.

ஆனால் தற்போது வெளியான ப்ரோமோவின் படி மறுநாள் காலையில் எழுந்து பார்க்கையில் அப்பத்தா காணாமல் போய்விட்டார். அப்பத்தாவை யார் கடத்தி இருப்பார் என்ற சந்தேகம் பலரிடையேயும் எழுந்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் குணசேகரன் மேல் தான் சந்தேகப்படுகின்றனர்.


ஆனால் ரசிகர்களின் கருத்துக் கணிப்பின் படி குணசேகரனிடமிருந்து அப்பத்தாவைக் காப்பாற்றுவதற்காக ஜீவானந்தம் தான் கடத்தி இருப்பார் எனக் கூறி வருகின்றனர்.

ஆகவே அப்பத்தாவை உண்மையில் யார் கடத்தி இருப்பார்கள்? கதிரா, ஜனனியா அல்லது குணசேகரனா? யாருடைய வேலையாக இருக்கும். அப்பத்தாவை என்ன பண்ண போறாங்க? ஜீவானந்தத்திற்கு உண்மை தெரிந்ததா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement