• May 18 2024

பார்த்தவுடன் பிடிக்கும்ல அந்த மாதிரி என்னோட கிஃரஸ் ரச்சிதா தான்- குஷியில் இருக்கும் ராபேட் மாஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.சமீபத்தில் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே வெடித்த பிரச்சனை தான், பிக்பாஸ் குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறி இருந்தது. தொடர்ந்து, ஜிபி முத்துவுக்கு ஆதரவாக பேசி இருந்த ஜனனி, தனலட்சுமி செய்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்


நேற்றைய தினம் நடந்த ரிவியூ டாஸ்க்ல இருந்து தான் கன்ரினியூ ஆச்சு. எல்லா ரீமும் இன்று எல்லோருக்கும் 5 ஸ்டார்ஸ் வழங்கின. இதனால் இந்த மூன்று நாட்களிலும் அதிகமான ஸ்கோர் வாங்கி வெசல் வோசிங் ரீம் முதலிடத்தைப் பிடித்தது. இதனால இந்த டீமோட தலைவரான ஜனனி நேரடியாக தலைவர் போட்டிக்கு தேர்வாகினாங்க.

இதனைத் தொடர்ந்து சுஃவாப்பிங் டைம் வந்திச்சு இது தான் கடைசி சுஃவாப்பிங் டைம் என்பதனால் நாமினேஷன்ல இருந்தவங்க தமது பக்க கருத்துக்களை தமது டீம் தலைவர் கிட்ட சொன்னாங்க அதன் பின்னர் சுஃவாபிங்கின் போது மகேஸ்வரி, ராம் ,அஸார் ,தனலக்ஷ்மி  ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு நேரடி எலிமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டாங்க.


பின்பு பெஸ்ட் பொஃபோமராக ஜி.பி முத்துவும் சாந்தியும் தேர்வாகினாங்க. வேஃஸ்ட் போட்டியாளர்களாக குயின்ஷியும் ஷிவினும் தேர்வாகினாங்க. இதற்கிடையில் ஜனனி தனலக்ஷ்மியை சுஃவாப்பிங் பண்ணனதால தனம் தனியை போய் இருந்து அழுதிட்ட இருக்கிறாங்க.பின்பு ஆயிஷா போய் தனலக்ஷ்மியை அழைத்து வந்தாங்க. இதன் பின்னர் விக்ரமன் ஜனனி கிட்ட போய் இந்த விஷயம் குறித்து பேசுறாங்க.

அதன் பின்னர் அடுத்தனால் காலை தொடங்கியது. எல்லோரும் சேர்ந்து மாஸ்ன் ஆடினாங்க பின்னர் நாமினேட் ஆனவங்க தமக்குள்ள பேசிட்டு இருந்தாங்க. குறிப்பாக சாந்தி மாஸ்டர் தனது குழந்தைகள் பற்றி ஆயிஷா கிட்ட சொல்லி அழுதிட்டு இருந்தாங்க. அதன் பின்னர் லட்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடக்கும் போது மகேஷ்வரி கண்ணாடில போய் முட்டிக்கிட்டாங்க. இதனால அவங்க தலை ரொம்பவே வீங்கிடுச்சு. ஏனைய போட்டியாளர்கள் அவரை கவனித்து கொண்டனர்.

இதன் பின்னர் ரச்சிதா புடைவையில வந்ததை பார்த்த ஆண் போட்டியாளர்கள் சைட் அடிக்கின்றனர். குறிப்பாக ராபேட் மாஸ்டர் ரச்சிதா தன்னோட கிரஸ் என்று கூறுகின்றார்.தான் சீரியல் பார்க்க மாட்டேன் ஒரு நாள் எதேர்ச்சையாக பார்க்கும் போது ரச்சிதாவை பார்த்து ஏன் இவங்க இன்னும் படம் நடிக்க வரல எனறு யோசிச்சேன் என்று கூறினார்.


இதன் பின்னர் எல்லாருக்கும் ராக்கெட் விடும் கேம் நடந்திச்சு இதில் ஏடிகே வின் பன்னினார். இதனால கமல் சேர் கொடுத்த பெட்டியை ஏடிகே திறந்தார். அப்போது அப்போது இவருக்கு விசிறியாக இருக்க ஒருவரை தெரிவு செய்யலாம் என்று கூறியதால அவர் அசலைத் தேர்வு செய்தார்.இவ்வாறு இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement