• May 18 2024

இந்த கப்பலை கரையேற்றி விடுவார் என்று நம்பித் தான் வந்தேன்- வெந்து தணிந்தது காடு குறித்து பேசிய ஏ.ஆர் ரகுமான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணியில் மூன்றாம் முறையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படமானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்,கைப் பற்றியுள்ளது.மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.இந்த நிகழ்வின் போது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மேடையில் பகிர்ந்து கொண்டார். அப்போது, இந்த படத்தை தேர்வு செய்ததற்கான காரணம் பற்றி பேசிய அவர், கௌதம் மேனன் மீதிருந்த நம்பிக்கை தான் காரணம் என்றும், அவர் இந்த கப்பலை கரையேற்றி விடுவார் என்றும் நம்பியதாக கூறி உள்ளார். மேலும் சிம்பு நடித்துள்ளதும் தான் இந்த படத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்றும் அவர் கூறி உள்ளார்.


அதே போல, வெந்து தணிந்தது காடு படத்தில் வரும் மறக்குமா நெஞ்சம் பாடலில் அந்த வார்த்தை அதிகம் வருவதற்கான காரணம் பற்றியும் கருத்துகளை ரஹ்மான் பகிர்ந்திருந்தார். சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் குறித்தும், வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல்கள் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் பேசியுள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement