• Apr 27 2024

நான் அப்படிப்பட்டவன் இல்ல- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அசல் கோலாறு கொடுத்த முதல் இன்டர்வியூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டாம் வாரம் நாமினேட் ஆகி வெளியேறியவர் தான் அசல் கோலாறு. இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளிறும் போதே தான் ஏன் இந்த இடத்தில் வந்தேன் என்று தெரியவில்லை என்று கூறிட்டிருந்தார்.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அசல் தற்பொழது பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் நான் வீட்டை விட்டு வெளியேறி இன்டெர்நெட்டை வந்த பார்த்தேன். அதுக்கப்பிறம் தான் புரிஞ்சுது. இப்படி ஒரு விஷயம் வெளில நடந்திட்டு இருக்கு என்று அதைப் பார்க்கும் போது ரொம்ப கஸ்டமாக இருக்கு என்று தெரிவித்தார்.


மேலும் வீட்டிலேயே உங்களுக்கு பிடிச்ச போட்டியாளர் யார் என்று கேட்ட போது மணி கண்டன் அசீம் தனலக்ஷ்மி நிவாஷினி கதிரவன் என எல்லோரையும் பிடிக்கும் எனறு கூறினார் மேலும் பாட்டியயாளர்கள் ஒவ்வொருவர் குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது நிஷாசினி குறித்து கேட்ட போது அவங்க இன்னும் கொஞ்சம் எல்லோரையும் கமிட்டாகி விளையாடினால் நல்லா இருக்கும் என்று கூறினார்.

மேலும் தனலக்ஷ்மி எல்லாத்தையும் நேரடியாகப் பேசக் கூடிய பொண்ணு யாருக்கிட்டையும் பயப்படமாட்டா. அதே போல விக்ரமன் பற்றி என்னால பேச முடியாது கரெக்டா விளையாடிட்டு இருக்கிறார். கதிரவனும் அப்படித்தான் சேஃப் கேம் விளையாடிட்டு இருக்கின்றார்.


அதே போல ஜனனி புத்திசாலித்தனமாக விளையாடிட்டு இருக்கிறாங்க அதை வெளில வந்து பார்க்கும் போது தான் தெரியுது.அவங்க பற்றி முதல்ல தெரில அவங்க ஊர்ல என்ன பண்ணிட்டு இருந்தாங்க என்று அவங்க சூப்பராக விளையாடிட்டு இருக்கிறாங்க. அதே போல ஆயிஷா எமாஷனல்களுக்கு நிறைய இடம் கொடுக்கின்றார்.அவங்க கரெக்டா பேசிட்டு தான் இருக்கிறாங்க என்று கூறினார்.

மேலும் அசீம் தனலக்ஷ்மி மாதிரி தான் எல்லார் கிட்டையும் நேரடியா பேசிட்டு இருக்கிறார்.ஷிவின் எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு தான் பேசுறாங்க. என்னால அவங்க கிட்ட கனெக்ட் ஆக முடில அவங்களுக்கு பிடிச்சவங்க கிட்ட மட்டும் தான் நல்லா இருக்கிறாங்க என்று கூறினார்.


மேலும் ஜி.பி முத்துவை ரொம்ப மிஸ் பண்ணினோம்.அவர் எங்க இருந்தாலும் ஜாலியாத் தான் இருப்பார். அவர் போனதும் எல்லாமே போன மாதிரி தான் இருந்திச்சு என்று கூறினார்.அத்தோடு பிக்பாஸ் வீட்டில யார் வின் பண்ணுவாங்க என்று தெரில மக்களுக்கு யாரைப் பிடிக்குதோ அவங்க தான் வெற்றி பெறுவாங்க என்று தெரிவித்தார்.

மேலும் நான் அந்த வாரம் வீட்டில இருந்து வெளியேறாவிட்டால் கண்டிப்பா அசீம் தான் வெளியேறியிருப்பார். அவர் தான் எல்லாகிட்டையும் ரெட் காட் வாங்கியிருக்கிறார் என்றும் கூறினார். மக்கள் என்னோட விஷயத்தில பார்த்தது என்னது என்றால் நான் எல்லாப் பெண்கள் கிட்டையும் தவறாக நடந்த மாதிரி தான் நினைச்சிட்டு இருக்கிறாங்க. நான் சொந்தக்காரப் பொண்ணுங்க கிட்ட இருக்கிற மாதிரி தான் அங்கேயும் இருந்தேன். நான் மீம்ஸ்ல வந்த மாதிரி பையன் இல்லை. நான் அந்த மாதிரி மைன்ட் செட்ல பொண்ணுங்க கிட்ட அப்படி நடந்துக்கல. மற்றும் படி நான் தவறானவன் இல்லை. இது மாற்ற வேண்டிய விடயம் தான் கண்டிப்பாக மாற்றிக் கொள்ளுறேன்.ரொம்ப கஷ்டமாக இருக்கு நான் பொண்ணுங்க கிட்ட இனிமேல் இப்படி நடந்து கொள்ளமாட்டேன் என்னும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement