• May 18 2024

இதுக்கெல்லாம் பயப்படுற ஆளோ தயங்கிற ஆளோ நான் கிடையாது- ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த வனிதா

stella / 11 months ago

Advertisement

Listen News!

திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய வனிதா விஜயகுமார், பிக் பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியின் மூலம், மீண்டும் பிரபலமானார்.இதனை அடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகின்றார். அந்த வகையில தற்பொழுது அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்

அதுமட்டுமில்லாமல், யூடியூப் சேனல் மற்றும் சொந்தமாக துணி கடை, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி பிஸ்னாஸ் உமனாகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள வனிதா விஜயகுமார் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.


வனிதா பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியில் வர அவரை சந்தித்து ரசிகர்கள் செல்பி எடுத்தனர். இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் வனிதா. தமிழில் தற்போது நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்தடுத்து இந்தப்படங்கள் திரைக்கு வர உள்ளது.

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அநீதி' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கிறேன். தெலுங்கில் நான் நடித்துள்ள 'மல்லி பெல்லி' படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பெருமாளை பார்க்க வந்துள்ளேன். தற்போது சினிமாவில் எனக்கு ரீ என்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளது.

நான் திரைத்துறையில் வந்த போது மிகவும் சிறிய பெண். 15 வயது தான் இருக்கும். இதனால் திரைத்துறை பற்றி பெரிதான அனுபவம் இல்லை. இப்போது சினிமாவை நன்கு புரிந்து கொண்டேன். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதில்லை. திரைத்துறையில் எனது இரண்டாவது இன்னிங்சிற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.


மேலும், திருப்பதி வந்தால் திருப்பம் ஏற்படும். இப்போ சிங்கிளா வந்து இருக்கீங்க. அடுத்து ஜோடியா வருவீங்களா என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு தற்போது சினிமாவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார் வனிதா. அதனை தொடர்ந்து இப்போ சினிமாவை லவ் பண்றீங்க. ரியலா எப்போ லவ் பண்ணுவீங்க என மறுபடியும் கேட்கப்பட்டதிற்கு, நடந்தா பார்த்துக்கலாம். அதுக்கு பயப்படுற ஆளோ. தயங்குற ஆளோ நான் இல்லை என அதிரடியாக தெரிவித்துள்ளார் .


Advertisement

Advertisement