• May 18 2024

அது எப்படிடா என்னை நானே அசிங்கப்படுத்திப்பேன்... ரவிக்கு ஆதரவாக பேசியவருக்கு சம்யுக்தா கொடுத்த பதிலடி..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து கடந்த மார்ச் திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்த நிலையில் தற்போது பிரிந்துவிட்டனர்.


திருமணமான இரண்டே மாதத்தில் இருவரும் பிரிந்தது குறித்து சம்யுக்தா இருவரும் மாறி மாறிப் பல விளக்கங்களை கொடுத்த வண்ணமே இருக்கின்றனர். 


இப்படி ஒரு நிலையில் சம்யுக்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் "அக்கா ஏன் ரவி அண்ணா மேல தப்பு தப்பா பழி சுமத்துறீங்க. அவங்க அப்படி என்ன துரோகம் உங்களுக்கு பண்ணிட்டாங்க? ரொம்ப கஷ்டமா இருக்கு. ரவி அண்ணா மேல இப்படி எல்லாம் பழி சொல்லாதீங்க. ரவி அண்ணா ரொம்ப ஜெனியூன் மேன். நானும் உங்களோட ஃபேன் தான். ரெண்டு கண்ணுல எந்த கண்ணு வேணும்னு கேட்டா நான் எப்படி சொல்லுவேன். நீங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்பவும் இம்பார்டன்ட் தான். நீங்க ரவி அண்ணாவை லவ் பண்ணி இருக்கீங்க பட் அவங்க அக்செப்ட் பண்ணலன்னு இப்படி தப்பா சொல்லாதீங்க, அக்செப்ட் அக்கா ஐ அம் வெரி சாரி என்று பதிவிட்டு இருந்தார். 


அந்த ரசிகரின் கேள்விக்கு சம்யுக்தா பதிலளிக்கையில் "ஒரு ரசிகரா உங்களுடைய பீலிங்ஸ் நான் ரெஸ்பெக்ட் பண்ணுறேன். நான் அவர் கூட ஒரு வருஷம் டிராவல் பண்ணி இருக்கேன். உங்களுக்கு நாங்க ஆன்ஸ்கிரீன்ல என்ன நாங்க நடிச்சமோ அது மட்டும்தான் தெரியும். உங்களுக்கு அவர் பிடிக்கும் என்றால் அவருக்கு சப்போர்ட் பண்ணுங்க பட் உண்மையை அக்சப்ட் பண்ணி தான் ஆகணும். என்னை அவர் அக்செப்ட் பண்ணல என்கிறதுக்காக நான் அவர் மேல இப்படி பழி சொல்லணும்னு சொல்றதுக்கு ரொம்ப சீப்பா இருக்கு. 

உண்மையாக அவர் அப்படி பண்ணுனதுனால தான் அடுத்த நாள் நான் என் டியூப் லைட் ஆபிஸ்க்கு போய் இனிமே நான் அவர்கூட நடிக்க மாட்டேன் என்று சொல்லி சேனல் கிட்டையே சண்டை போட்டுட்டு அடுத்த நாள் அவர் வீட்டுக்கு போய் அவங்க அம்மா கிட்டேயும் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்துட்டேன். அது எப்படி டா என்னையே நான் அசிங்கப்படுத்திப்பேன். அப்ப கூட நான் இந்த மீடியாக்கு எடுத்துட்டு வரல பட் நான் என் அண்ணன்னு நெனச்சு ஒருத்தர்கிட்ட சொன்னேன்.

அவர் தான் கேவலமா ரெக்கார்ட் பண்ணி விஷ்ணுகாந்துக்கு அனுப்பி, அவர் அதை மீடியால கொடுத்து இப்ப பெரிய நியூஸா இது போயிட்டு இருக்கு. ஒரு பொண்ணு வெட்கத்தை விட்டு போயிட்டு ஓபனா இதை சொல்றத சுச்சுவேஷனுக்கு வந்து இருக்கானா, அவ எவ்ளோ கஷ்டத்துல இருப்பா? அத உங்களுக்கு புரிஞ்சிக்க முடியல. ஆனாலும் ஓகே நான் எந்த பொய்யும் சொல்லல. பொய் சொல்றதுக்கான அவசியமும் எனக்கு கிடையாது" என்று அந்த நபருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.


Advertisement

Advertisement