• May 18 2024

என்கிட்டப் பேச வேண்டிய அவசியம் அவருக்கில்லை... அஜித் குறித்து அதிரடியாகப் பதிலளித்த பாவனா..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் நம்ம இளைஞர்கள் பலரதும் கனவுக் கன்னி என்றால் அது நம்ம பாவனா தான். இவரின் நடிப்பினையும் தாண்டி சிரிப்பிற்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். இவர் குறிப்பாக தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்

அந்தவகையில் தமிழில் கடைசியாக அஜித்துடன் இணைந்து அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மலையாள படங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பாவனாவிடம் "தமிழில் உங்களது கடைசி படம் அஜித்துடன் நடித்த அசல். அஜித்துடன் பேசுறதுண்டா??" எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாவனா பதிலளிக்கையில் "என்னால் அசல் படம் மறக்கவே முடியாது. ரொம்ப நல்ல அனுபவமா இருந்துச்சு. அஜித் சார் ரொம்ப அன்பாகவும் அக்கறையாகவும் என்னைப் பார்த்துக் கொண்டார்" என்றார்.


மேலும் "சமீபத்தில் துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது மஞ்சு சேச்சியிடம் என்னை பற்றி விசாரித்திருக்கிறார். இதனையடுத்து அவரிடம் நான் போன் செய்து பேசினேன். அப்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றதால் நேரில் சென்று அஜித்தை சந்தித்தேன். அதன் பிறகு அஜித் சார், மஞ்சு சேச்சியுடன் இணைந்து நாம் அனைவரும் ஒன்றாக மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டோம். 

அந்த சமயத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் நான் அவரது பிறந்தநாளுக்கு பதிவிட்டு இருந்தேன். அந்த நாள் என்னால் என்றுமே மறக்க முடியாத நாள் ஆயிடுச்சு. அஜித் சார் என்கிட்ட பேச வேண்டிய அவசியம் இல்லை அசல் படம் எப்பவோ வந்தது ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர் என்னை மறக்காமல் நலம் விசாரித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு அன்பாக இருக்கிறதுனால தான் அவரை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்" எனவும் அப்பேட்டியில் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பாவனா.

Advertisement

Advertisement