• May 18 2024

காமெடி நடிகர் பாண்டியின் மனைவியைப் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகி வரும் திருமண புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடியனாகவும் நடித்து வருபவர் பாண்டி. இவர் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்தத் திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சிங்காரச சென்னை, கில்லி, ஆட்டோகிராப், லீ, முருகன், சாட்டை, மாசாணி, ஜில்லா போன்ற பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.

அந்த திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்த நிலையில் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.இதுமட்டுமில்லாமல் இவர் விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள் என்ற நிகழ்ச்சியில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேலும் இவர் பத்மினி என்ற ஒரு பெண்ணை 7 வருடமாக காதலித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து விட்டார். இவர்களின் கல்யாணம் அரும்பாக்கத்தில் உள்ள ஐஸ்வர்யா மஹாலில் திருமணம் நடந்தது.

அவரது திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் இது தான் பாண்டியின் மனைவியா என பலரும் கமென்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement