• May 18 2024

மறைந்த காமெடி நடிகர் பாண்டுவின் மகனை பார்த்திருக்கின்றீர்களா... அடேங்கப்பா இப்படி இருக்காரே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பலரினதும் மனங்கவர்ந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் பாண்டு. இவர் 1970இல் வெளியான 'மாணவன்' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


அதனைத் தொடர்ந்து 'பணக்காரன்', 'சின்ன தம்பி', 'ரிக்ஷா மாமா', கில்லி', 'போக்கிரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

பாண்டுவின் வசன உச்சரிப்பும், நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் தனித்தன்மை வாய்ந்தவை. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'இந்த நிலை மாறும்' என்பதுதான்.


இவ்வாறாக பலரதும் மனங்களை கவர்ந்து வந்த இவர் சென்ற வருடம் காலமானார். பாண்டுவின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். அதாவது பாண்டு, மனைவி குமுதா, மேலும் அவரின் மகள், மகன்கள் பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

நடிகர் பாண்டு நடிப்பினை தாண்டி 'கேப்பிடல் லெட்டர்ஸ்' எனும் நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த கம்பெனியின் வாயிலாக பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து கொடுத்து வந்தார்.


இந்த நிறுவனத்தினை தற்போது அவரின் மகன்களில் ஒருவர் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார். எனினும் இப்போது அவரின் மகன்கள் வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆகி இருக்கின்றனர்.

மேலும் இதுவரை அவரின் குடும்பத்தில் பாண்டுவினை தவிர வேறு யாரும் சினிமா பக்கமே எட்டி கூட பார்க்கவில்லை. அவர்விட்டு சென்ற அந்த நிறுவனத்தினை நடத்துவை தான் அவர்கள் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் பாண்டு மறைவதற்கு முன்பு அவரின் மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement