• May 18 2024

ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வந்த குணசேகரன் வைத்த கோரிக்கை - மகனைக் கண்டதும் கண்ணீர் வடித்த அவரது அம்மா-இனி நடக்கப்போவது என்ன?

stella / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்தவாறு இருக்கின்றது.

இந்த நிலையில் ஜீவானந்தம் குணசேகரனின் சொத்தை தன்னுடைய சொத்து சொன்னதால் குணசேகரன் சொத்தை எப்படி மீட்பது என்று தெரியாமலேயே யோசிச்சு யோசிச்சு ஹாஸ்பிட்டலில் நெஞ்சுவலி வந்ததால் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். அவருக்கு ஒரு கை இழுத்தும் விட்டது.


இப்படியான நிலையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில் குணசேகரன் ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வருகின்றார். அப்போது அவருடைய அம்மா மூத்தவன் எங்கே என்று கேட்ட போது குணசேகரன் வந்திட்டேன் என்று சொல்கின்றார்.

பின்னர் குணசேகரன் நேராக பூஜை அறைக்கு சென்று ஆத்தா மீனாட்சி இன்டைக்கு இரண்டு கையாலும் கும்பிட முடியாது உன்னையத் தான் நம்பியிருக்கிறேன். என்று சொல்லி அழுகின்றார். இதைப் பார்த்து அவருடைய அம்மாவும் அழுகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement