• May 19 2024

பாக்கியாவுடன் சேர்ந்து கோபி செய்த வேலை, ராதிகா பார்த்தால் என்ன ஆகிறது உங்க நிலமை- வைரலாகும் போட்டோ

stella / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.கணவனைப் பிரிந்து வாழும் பெண் தன்னுடைய வாழ்க்கையில் எப்படியான பிரச்சினைகளை எதிர் கொள்கின்றாள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

சீரியலின் கதைப்படி பாக்கியா தன்னுடைய பிஸ்னஸை தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபட்டு வருகின்றார். இது ஒரு புறம் இருக்க செழியனுக்கு ஜெனி வீட்டிலிருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதால் ஜெனியையும் செழியனையும் எப்படி சேர்த்து வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கின்றார்.


அத்தோடு எழிலின் மனைவி அமிர்தாவின் முதல் கணவன் மீண்டும் வந்து அமிர்தாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால்,பாக்கியா எழில் வாழ்க்கையை எப்படிக் காப்பாற்றுவது என்ற பிரச்சினையிலும் இருக்கின்றார். செழியனின் பிரச்சினையால் ராதிகாவும் பாக்கியா குடும்பத்திற்கு சர்ப்போட்டாக இருக்கின்றார்.


இந்த நிலையில் தற்பொழுது பாக்கியாவும் கோபியும் சேர்ந்து சாமி கும்பிடுகின்ற போட்டோ வெளியாகியுள்ளது.இதனைப் பார்த்த ரசிகர்கள் ராதிகா பார்த்த உங்க நிலமை என்ன ஆகிறது கோபி என்று கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement