• May 18 2024

ஜான்சி ராணிக்கும் ரேணுகாவுக்கும் இடையில் வெடித்த சண்டை- தன்னுடைய அப்பாவால் அதிர்ச்சிக்குள்ளான ஜனனி- Ethirneechal - Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதில் குணசேகரனைத் தேடி நீதிபதி வீட்டுக்கு தம்பிமார்கள் போகின்றனர். இப்போது அங்கு நின்றவர் குணசேகரனை ஜெயிலுக்கு கூட்டிட்டு போயாச்சு என்று சொல்ல,கரிகாலன் மாமா வராமல் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன் என்கின்றார்.


தொடர்ந்து ஜனனியின் அப்பா பேசிட்டு இருக்கும் போது ஜான்சி ராணி, பொம்பிளைகள் படிச்சால் குடி கெட்டுப் போய்டும். அதுக்கு உதாரணம் தான் இந்தக் குடும்பம் என்கின்றார். இதனால் ரேனுகா படிப்பைப் பெற்றி பேச உனக்கு அருகதையே இல்லை எனத் திட்டுகின்றார்.

அப்போது ஜனனி தன்னுடைய அப்பாவை உள்ளே அழைக்க, அவர் ஜனனியின் கையை உதறிவிட்டு என் பொண்ணுக்கு கல்யாணம் வைச்சிருக்கிறேன். அதை சொல்லத் தான் வந்தேன் என்று சொல்லி விட ஜனனி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement