• Apr 28 2024

'அவ கூறியதெல்லாம் உண்மை தான் அவளை நான் சரி பண்ணுவேன்'- திடுக்கிடும் தகவல்களை கூறிய ஸ்ரீநிதியின் அம்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர்கள் தான் நட்சத்திரா மற்றும் ஸ்ரீநிதி. இதில் நட்சத்திரா தற்பொழுது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

மேலும் ஸ்ரீநிதி கடந்த சில நாட்களாக சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகின்றார். அதாவது அண்மையில் வலிமை திரைப்படத்தை பற்றி பேசி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். அதே போல சிம்புவைக் காதலிப்பதாகவும் அவருடன் என்னை சேர்த்து வையுங்கள் என்றெல்லாம் போராட்டம் நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் தனது தோழியான நட்சத்திரா விவாகரத்துப் பெற்ற ஒருவரைக் காதலிப்பதாகவும் அந்த நபர் மோசமானவர் என்றும் கூறியிருந்தார். இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருக்கும் நிலையில் தற்பொழுது அவருடைய அம்மா பிரபல சேனல் ஒன்றுடன் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது ஸ்ரீநிதி சொன்னது உண்மை தான் நட்சத்திரா நல்ல பொண்ணு. அவள் லவ் பண்ற பையனும் நல்ல பையன் நல்ல குடும்பம். தன்னோட ப்ரண்ட் தன்னை விட்டு போகப் போறாங்க என்று நினைச்சதால தான் ஸ்ரீநிதி இப்படி பேசுறாள். இது இவளோட ஓவர் கற்பனை மற்றும் படி நட்சத்திரா மிகவும் அமைதியான பொண்ணு என்று கூறினார்.

அத்தோடு நட்சத்திரா இரண்டு நாட்களுக்கு முதல் தான் வீட்டை வந்து சாப்பிட்டு போனாள். உண்மை ஜெயிக்கும் என்று கூறுவதெல்லாம் பொய்யுங்க. இப்ப காசு இருந்தாலே என்ன வேணும் என்றாலும் செய்யலாம். நான் என் பொண்ணு கிட்ட இருந்த போனை பறிச்சு வச்சுகிட்டேன். அந்த வீடியோ போட்டது எனக்கு ரொம்ப கவலையாச்சு. அது அவ லைப் அவளே பார்த்துப்பா. இவளுக்கு இது தேவையில்லாத வேலை என்றும் கூறியிருந்தார்.

மேலும் சிம்பு விசயத்தில ஏன் இப்படி பண்ணினாள் என்று தெரில நான் அதை பற்றி பேச விரும்பல எல்லா பெற்றோருக்கும் சொல்ல விரும்பிறது ஒன்று தான் ப்ரண்ட் யாரையும் ஒரு அளவுக்கு தான் வச்சிருக்கணும் அளவுக்கு மீறி குடும்பத்தோடு நண்பர்களை சேர்க்கக் கூடாது என்று கூறினார்.

மேலும் இவ இதில இருந்து மீண்டு வருவாள். கண்டிப்பா இவளை குணப்படுத்துவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு. இவளை ரிகாபிளேஷன் சென்டருக்கு விடணும் என்று நட்சத்திரா தான் சொல்லி இருந்தா நான் அப்படி எல்லாம் என் பொண்ணை விடமாட்டேன்.

சொந்தக்காரங்களே சொன்னாங்க மீடியால விட்டதால தான் உங்க பொண்ணு இப்படி வந்திட்டா என்று நான் என் பொண்ணை அப்படியே விடலையே மகளை லோ படிக்க வைச்சிருக்கிறேன். எல்லாம் எனக்கு கஷ்டம் தான். நான் சொல்லுறத அவ கேட்டாலே அவளை நான் மீட்டு எடுப்பேன். எனக்காக நட்சத்திரா குடும்பம் அவள மன்னிச்சு விட்டால் போதும் என அவர் கூறியதை அந்த வீடியோவில் பார்க்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement