• May 12 2024

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் வந்த அந்தக் கடை... இத்தனை நாட்களாக எங்கு இருந்திச்சு தெரியுமா..? அதோட நிஜப் பெயரே இதுதானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. மற்ற சீரியல்களைப் போல் அல்லாமல் இந்த சீரியலானது தமிழிலேயே உருவாகி இருக்கும் ஒரு கதை ஆகும். இதைத்தான் பின்னர் பல மொழிகளில் ரீமேக் செய்துள்ளார்கள்.


இந்நிலையில் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் கதையிலும் புதிய புதிய விஷயங்கள் நடக்கிறது. அந்தவகையில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துவிட்டார்கள், அத்தோடு கதிர் பிரிந்துவிட்டார், அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா புதிய தொழில் ஆரம்பித்துவிட்டார்.

இவ்வாறாக அடுத்தடுத்து பல திருப்புமுனைகளும் இடம்பெற்று வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது டிபார்ட்மென்ட் ஸ்டோர் செல்வதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் நடத்திய கடை எங்கே இருக்கிறது என்பது தொடர்ப்பாகவும், கடையின் உண்மையான பெயர் என்ன என்பதுவும் வெளியாகியுள்ளது.


அந்தவகையில் இந்தத்தொடரில் வரும் அந்தக்கடை இதுநாள் வரை குன்றக்குடியில் இருந்து காரைக்கால் செல்லும் இடத்தில் 1 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளதாம். அந்த கடையின் நிஜ பெயர் 'அன்னை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்' எனவும் கூறப்படுகின்றது. 


அதனைத் தொடர்ந்து தற்போது அந்த கடையை 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் பெயர் வைத்தே கடை உரிமையாளர்கள் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement