• May 13 2024

ஆரம்பமான தனுஷின் கேப்டன் மில்லர் பட சூட்டிங்...எங்கு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசான வண்ணம் உள்ளது.இதை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளார்கள்.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன், வாத்தி படங்கள் வெளியாக உள்ளன. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். இதற்கான பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது.

கோலிவுட் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எதையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து தன்னுடைய கொடியை நாட்டி வருகிறார் நடிகர்  தனுஷ். ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன், தி க்ரே மேன் என அவரது படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் நேரடியாக வெளியாகின.

இதனிடையே சமீபத்தில் அவரது நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசான திருச்சிற்றம்பலம் படம் அவருக்கு வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. ஆண் -பெண் நட்பை இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டு இயல்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளின்மூலம் சிறப்பாக்கியிருந்தார் இயக்குநர்.இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்க்கப்பட்டது.

மேலும்  இந்தப் படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு நாளில் தனுஷின் நானே வருவேன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவும் இயக்கியுள்ளதுடன் படத்தில் முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து டிசம்பர் 2ம் தேதி தனுஷின் வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிப்படமாக வெளியாகவுள்ளது.அத்தோடு  இந்தப் படத்தின்மூலம் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் அவருக்கு ஜோடியாகியுள்ளார். கல்விக் கொள்கைகளை இந்தப் படம் கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளது.



அத்தோடு தனுஷின் அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக இணையவுள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.



இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் போன்றவர்களும் இணைந்துள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகி உள்ளது.இப் படத்தின் சூட்டிங்கிற்காக தென்காசியையொட்டி பிரம்மாண்டமான அளவில் கிராமம் செட் போடப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங்கிற்காக தனுஷ் இன்றைய தினம் நெல்லை சென்றுள்ளார்.

அத்தோடு ராக்கி, சாணிக்காயிதம் போன்ற அழுத்தமான கதைகளை கொடுத்துள்ள அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தில் தனுஷை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அழுத்தமான கதைகள் என்றால் தனுஷ் புகுந்து விளையாடுவார், அந்த வகையில் இந்தப் படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement

Advertisement