பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
மேலும் இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகியுள்ளது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல முறை முயற்சி செய்து வந்தார் மணிரத்னம்.
சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
எனினும் தற்போது தன்னுடைய நீண்ட கனவு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் மணிரத்தினம்.பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகின்றது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
மேலும் இப்படத்தின் டீசருக்காக தான், திரையுலகமே காத்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசர், நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறதாம்.
இந்த டீசர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்
- நடிகை பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..? வெளியானது விபரம்..!
- ஆடையை சிறிதாக்கி அங்கத்தை காட்டும் ஸ்ருதி இப்படியா-பரபரப்பு காரணங்களை வெளியிடும் பயில்வான்..!
- லீனா மணிமேகலையின் ”காளி” பட சர்ச்சை – இணையம் எடுத்த அதிரடி..!
- பிரபல நடிகரின் யூடியூப் சேனலை வாங்கும் உதயநிதி? வெளியானது தகவல்..!
- “நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை…அவரிடம் ஏதோ ஒன்று இருக்கின்றது..” பிரபல நடிகை பகீர் பேட்டி..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!