• Apr 28 2024

சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் அணிந்த ஆடைகள் எதனால் உருவானது தெரியுமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!


பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான திரைப்படம் சந்திரமுகி 2. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது.

முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக நடித்திருந்த நிலையில், கங்கனா ரனாவத் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக நடித்துள்ளார்.கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளிவந்து நான்கு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


மூன்று நாட்களில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், நேற்று ரூ. 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழுவும் செம குஷியில் இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அதாவது சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராஜாவாக ராகவா லாரன்ஸ் போட்ட ஆடை அனைத்தும் காஞ்சிபுர சாறியினால் உருவானது என்றும் ஒரு ஒரு காஸ்டியூமுக்கு ஆறு சாறிகள் கொடுக்கப்பட்டதாகவும் இப்படத்தின் காஸ்டியூம் டிசைனர் இன்டர்வியூ ஒன்றில் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement