சீனியர் நடிகர் பப்லு மலேசியாவை சேர்ந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக விசயம் ரசிகர்கள் மத்தியிலும் சின்னத்திரை வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது பப்லு இது குறித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தனது இரண்டாவது திருமண சர்ச்சைக்குறித்து நடிகர் பப்லு என்கிற பிரித்விராஜ் என்ன சொன்னார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
நடிகர் பப்லு தனது இரண்டாவது மனைவியை அறிமுகம் செய்து வைத்தததாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளத்திலும் பல்வேறு ஊடகங்களிலும் காட்டுத் தீயாக பரவி வருகின்றன. இந்நிலையில், நடிகர் பப்லுவிடமே இது குறித்த விளக்கத்தை கேட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் திடீரென எப்படி வெடித்தது என்றும் ஏன் இவ்வளவு பரபரப்பாக மாறியது என்றே புரியாத மனநிலையில், இருந்த நடிகர் பப்லு, காலையில் இருந்து இது தொடர்பாக பல போன் கால்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இப்படியொரு விஷயம் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், என்ன கிளாரிஃபிகேஷன் கொடுக்கிறது என்றே தெரியவில்லை. நாளை ஒரு நாள் பொறுமையாக இருங்கள், இது குறித்து அனைவருக்கும் தெளிவுப்படுத்துகிறேன் எனக் கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார் நடிகர் பப்லு.
56 வயது நடிகர் பப்லு, 23 வயது மலேசிய பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார் என்கிற பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்து மறுக்கவோ இல்லை திருமணம் செய்து கொண்டது உண்மை தான் என்று நடிகர் பப்லு ஆமோதிக்கவும் இல்லை.
அத்தோடு நடிகர் பப்லுவுக்கு உண்மையாகவே இரண்டாவது திருமணம் நடைபெற்றதா? அல்லது இது முழுக்க முழுக்க வதந்தியா? என்பது குறித்து நாளை அவரே விவரமாக அறிக்கை விடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் பப்லுவுக்கு பினா என்கிற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் ஆனது. இருவருக்கும் 25 வயதில் அஹத் எனும் மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!