இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இந்தப் படத்தில் இவருடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப்படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களை மட்டுமில்லாமல் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிலும் அள்ளிக் குவித்தது.இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கப்பட உள்ளது. முதல் பாகத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாகவே இந்தப் படம் இரண்டு பாகங்களில் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் சுகுமார் தெரிவித்திருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் இவர்களுடன் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக களமிறங்கியுள்ளார் .
இந்நிலையில் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ரூ. 35 கோடி சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் என்ற அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
பிற செய்திகள்
- ஹீரோ ஆன பிக் பாஸ் அபினை-வைரலாகும் புகைப்படங்கள்..!
- இந்த விடயத்தை அப்பா தான் செய்யனும் ..யுவனுக்கு கண்டிஷன் போட்ட அமீர்!
- பிரதாப் போத்தன் கொடுத்த செயின் என் கழுத்துல இப்போவும் இருக்கு-பிரபல நடிகர் உருக்கமான கதை…
- பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த விக்ரம்-நடந்தது என்ன..?
- ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!