• Apr 28 2024

கணவரைப் பிரிந்து வாழும் திவ்யதர்ஷினி.. விவாகரத்திற்கு இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. இவர் கலைஞர் டிவி சன்டிவி விஜய் டிவி எனப் பல்வேறு தெலைக்காட்சிகளில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.



மேலும் தற்பொழுதும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவர் பிரபலங்களை பேட்டி காணும் நிகழ்ச்சிகளை முக்கியமாக தொகுத்து வழங்கி வருகின்றார். இது தவிர பல திரைப்படங்களிலிலும் நடித்து வருகின்றார்.



இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில்  2014ஆம் ஆண்டு டிடி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி 3 வருட வாழ்க்கையிலே முடித்துக் கொண்டார். இந்த கருத்து வேறுபாடு எதனால் இருவரும் இடையே கருத்து வேறுபாடு வந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.




அதன்படி, இனிமேல் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் வேண்டாம் என்று திவ்யதர்ஷினியிடம் ஸ்ரீகாந்த் எத்தனையோ முறை கூறியுள்ளாராம். ஆனால், அதற்கு முடியவே முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டாராம் டிடி. அதுமட்டுமில்லாமல் திருமணம் ஆன இரண்டாவது வாரத்திலேயே கணவர் கட்டிய தாலியை கழட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுவிட்டாராம் டிடி.



மேலும் இது ஸ்ரீகாந்தின் குடும்பத்திற்கு சற்று மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி பிரபல நடிகருடன் டிடி சில கிசுகிசுவில் சிக்கின்னார். இவை அனைத்தும் தான் ஸ்ரீகாந்த் - டிடியின் விவாகரத்து காரணாம் என்று பல செய்திகள் சொல்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement