• May 19 2024

அரியவகை நோய் பாதிப்பால் அமெரிக்கா பறந்தாரா சமந்தா-நடந்தது என்ன -மனேஜரிடம் இருந்து வெளிவந்த தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தாவுக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் பரவி வந்த நிலையில் அதன் உண்மைத் தகவலை சமந்தா தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின்  தனது கரியரில்  படு பிசியாகிவிட்டார். தற்போது அவர் கைவசம் யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய படங்கள்  என பல உள்ளது. இதுதவிர பாலிவுட்டில் 2 படம், கோலிவுட்டில் 2 படம் என நார்த் முதல் சவுத் வரை கைவசம் அரை டஜன் படங்களுடன் வலம் வருகிறார்  நடிகை சமந்தா.



இவற்றுள் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட சமந்தா, அடுத்ததாக குஷி படத்தில் தனது முழுக்கவனத்தையும் நடித்து வந்தார். ஷிவா நிர்வாணா இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார் சமந்தா. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அமெரிக்கா கிளம்பி சென்றுவிட்டார் சமந்தா



மேலும் அவரின் திடீர் அமெரிக்க பயணம் பல்வேறு யுகங்களை கிளப்பியது. அதன்படி அவருக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே சமீப காலமாக சமூகவலைத்தளத்தில் எந்தவித பதிவுகளையும் போடாமல் அதில் இருந்து ஒதுங்கி இருந்து வந்ததாகவும், தற்போது அதற்கு சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் தீயாய் பரவி வருகின்றது.



இவ்வாறுஇருக்கையில்  நடிகை சமந்தா தரப்பில் இருந்து தற்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது மேனேஜர் மகேந்திரா என்பவர் தெரிவித்ததாவது: சமந்தா நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்சனையும் இல்லை. தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள் என கூறியுள்ளார்.. இருப்பினும் அவர் எதற்காக அமெரிக்கா சென்றார் என்ற காரணத்தை அவர் கூறவில்லை.

Advertisement

Advertisement